என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேரட் சூப்
நீங்கள் தேடியது "கேரட் சூப்"
அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேரட் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், சோயா சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா - 100 கிராம்,
துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள் தலா - 1 டீஸ்பூன்,
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்,
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1/2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.
செய்முறை :
சோயாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும்.
கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சத்தான கேரட் - சோயா சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோயா - 100 கிராம்,
துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள் தலா - 1 டீஸ்பூன்,
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்,
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1/2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.
செய்முறை :
சோயாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும்.
கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சத்தான கேரட் - சோயா சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டில் தயாரிக்கப்படும் சூப்புகள் மிகவும் சத்தானவை. சூப்பை நம் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுவோம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
வெங்காயம் - 2
பீட்ரூட் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்கறி சத்து நீர் - 7 கப்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை :
கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும்.
இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 - 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.
சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
வெங்காயம் - 2
பீட்ரூட் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்கறி சத்து நீர் - 7 கப்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை :
கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும்.
இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 - 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.
சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் காய்கறி அல்லது கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முட்டைக்கோஸ் - கேரட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கேரட் - 1
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.
சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டைகோஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கேரட் - 1
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.
சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X